‘’எச்.ராஜா தலைமறைவு,’’ என்று கூறி புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் ( ) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா பேசியதாகப் புகார் எழுந்தது. இதன்பேரில், அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் உள்ளது.

Hindu Tamil Link I OneIndia Tamil Link

இத்தகைய சூழலில், மேற்கண்ட வகையில், எச்.ராஜா தலைமறைவு என செய்தி பகிரப்படுவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டு உண்மையில் புதிய தலைமுறை வெளியிட்டதா என தகவல் தேடினோம். இதுபற்றி புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது லோகோ வைத்துச் சிலர் வேண்டுமென்றே போலியாக தயாரித்து பகிர்ந்து வரும் செய்தி இது,’’ என்றார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:எச்.ராஜா தலைமறைவு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False