என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பதவி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், நாளுக்கு நாள் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை பகுதியில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த சூழலில், அதிமுக.,வில் நிலவும் பதவி மோதல் பற்றி ஜெயலலிதாவின் நிழலாக இருந்த வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார். சன் நியூஸ் இதுபற்றி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நாம் சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். ஆனால், இந்த நியூஸ் கார்டை எடுத்து, சிலர் வேண்டுமென்றே மேற்கண்ட வகையில் எடிட் செய்து வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered