பாஜக.,வினர் மீது குஜராத் மக்கள் தாக்குதல் நடத்தினார்களா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பா.ஜ.க-வினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆட்டோவில் பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க-வினர் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நான் உருவாக்கிய குஜராத் என திரு மோடி அவர்கள் பெருமைப்படப் பேசிய குஜராத்தில் மக்கள் பாஜகவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Jebasheela Alvin என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 16ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 2022ல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நடந்தது என்று சில பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பாஜக-வினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை, மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. ஆங்கில, வட இந்திய வீடியோக்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த செய்திகளைப் பார்த்தோம்.

அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் பிரசாரம் செய்துகொண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மஜூம்தார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பா.ஜ.க தொண்டர்கள் தன்னுடைய காரை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதாகவும் பதிலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எம்.எல்.ஏ தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் மேற்குவங்க எம்.எல்.ஏ வீடியோவில் இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive

இதன் மூலம், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவை குஜராத்தில் எடுக்கப்பட்டதாக தவறாக பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் பிரசாரத்துக்கு வந்த பாஜக-வினரை பொது மக்கள் தாக்கி விரட்டினர் என்று பரவும் வீடியோ கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக.,வினர் மீது குஜராத் மக்கள் தாக்குதல் நடத்தினார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False