‘’ டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ விஷச்சாராய சாவுகளால் தமிழக பெண்களின்

தாலி அறுபடுவதை,

அலட்சியம் செய்துவிட்டு

தில்லியில் கூத்தடிக்கும் விடியல் போராளிகள்..!’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு ஜூன் 24, 2024 அன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., Mahua Moitra அவரது X வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றின் லிங்க் கிடைத்தது.

Mahua Moitra Tweet

இதேபோன்று, கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் (காங்கிரஸ்) ஜோதிமணியும், X வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

இதில் ஒரு புகைப்படத்தை எடுத்தே, தமிழ்நாட்டு பெண் எம்.பி.கள் வடை சாப்பிடுவது போல தவறாகச் சித்தரித்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ… Hindustan Times Link

உண்மையான புகைப்படத்தையும், போலியான புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள் என்ற புகைப்படம் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False