FACT CHECK: எச்.ராஜாவின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

“நான் சாகலாம் என்று இருக்கிறேன்” என்றும் “தீக்குளிக்கப் போகிறேன்” என்றும் எச்.ராஜா பதாகை பிடித்ததாக சில படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா பதாகை ஒன்றைப் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் சாகலாம் என்று இருக்கிறேன்..” என்று போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை ஜீவா லெனின் என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே படத்தில், “கிஷோர் கே சாமி எலும்புக்கு சேதாரம் ஏற்பட்டால் தீ குளிப்பேன்” என்று எழுதப்பட்டு மற்றொரு பதிவும் பகிரப்பட்டு வருகிறது. இதை Karuththtu Kannayiram என்பவர் 2021 ஜூன் 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதுவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரிந்தே பலரும் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இது உண்மையான படம் இல்லை. எனவே, எது உண்மை என்று தெளிவை ஏற்படுத்த ஆய்வு செய்தோம்.

தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஜூன் 13ம் தேதி நடத்த போராட்டத்தின் போது அவரவர் வீடுகளுக்கு முன்பு பேனர், போஸ்டர் பிடித்தபடி பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அந்த வகையில் வானதி ஶ்ரீனிவாசன், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் பிடித்த போஸ்டரில் எடிட் செய்து வதந்தி பரப்பப்பட்டது. அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குறிப்பாக வானதி வெளியிட்டிருந்த படத்தை வைத்து விதவிதமான போட்டோ எடிட் செய்து பலரும் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக எச்.ராஜா-வுக்கு மனநல சிகிச்சை வழங்க வேண்டும் என்று வானதி போஸ்டர் பிடித்தது போல பலரும் பகிர்ந்தனர். அதுவும் தவறானது என்பதை அவருடைய ட்விட்டர் பதிவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

Archive

இந்த நிலையில் எச்.ராஜா போராட்டம் நடத்திய படத்தையும் விதவிதமாக எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. எனவே, அசல் படத்தை அவருடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் தேடி எடுத்தோம். தனியா பதாகை பிடித்திருக்கும் படத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

Archive

அதில், “தமிழக அரசே, தி.மு.க அரசே ஊரடங்கு காலத்தில் மதுக்கடை எதற்க்கு?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து தங்கள் இஷ்டம் போல் எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜா நடத்திய போராட்டத்தின் படத்தை எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter

Avatar

Title:எச்.ராஜாவின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered