
‘’விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த நியூஸ் கார்டை பலரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.
அதில், சன் நியூஸ் லோகோவுடன், ‘’கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய ஆக வேண்டும் – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்புகின்றனர்.

உண்மை அறிவோம்:
விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இதர இந்து மத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அதிக மக்கள் கூடும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர்வலம் போன்றவற்றை நடத்த, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த விவகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். இதையொட்டியே மேற்கண்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், உண்மையில், அண்ணாமலை அப்படி எதுவும் கருத்து கூறியதாகக் குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிடவில்லை. இதுபற்றி சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’வழக்கம்போல எங்களது லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி இது,’’ என்று உறுதி செய்தார்.
எனவே, சன் நியூஸ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
