
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “இவனுகளை தூக்கி குண்டாஸ்ல போட்டு ஆசனை வாய்ல லத்திய விட்டு ஆட்னா சரியாகிடும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Mujibur Rahman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பிற மதங்கள் பற்றி கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவர் கூறியதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவுகளை பகிர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு வழக்கமான நியூஸ் 7 தமிழ் வெளியிடுவது போன்று இல்லை. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அர்ஜூன் சம்பத் தொடர்பாக செய்தி எதையும் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதைப் போன்று எந்த ஒரு செய்தி, நியூஸ்கார்டும் நமக்குக் கிடைக்கவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாடுவது பற்றி அர்ஜூன் சம்பத் ஏதும் கருத்து தெரிவித்தாரா, அது தொடர்பாக ஊடகங்களில் அல்லது அவருடைய சமூக ஊடக பக்கங்களில் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சுகிதாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. எங்கள் பதிவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்” என்றார்.
இந்த புகைப்படத்தை எங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று அறிய தொடர்ந்து தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றின் முகப்பு படம் (Thumbnail) என்பது தெரியவந்தது. இதன் மூலம் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பகிரப்படும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பகிரப்படும் பதிவு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
