இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 98 சதவிகித மக்கள் பிரதமர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி ஆய்வறிக்கை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டை எடிட் செய்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவின் பிரதமரை 99% வெறுக்கும் No.1 மாநிலம் தமிழ்நாடு தான். BBC ஆய்வறிக்கையில் தகவல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Khaleell G என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு எந்த எந்த மாநிலங்களில் எவ்வளவு ஆதரவு என்று சில ஊடகங்களில் மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. அப்போது தமிழ்நாட்டில்தான் பிரதமர் மோடிக்கு மிகக் குறைந்த ஆதரவு உள்ளது என்று தெரியவந்தது. பிபிசி இப்படி ஏதேனும் ஆய்வு நடத்தியதா, அது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே, இது தொடர்பாக பிபிசி தமிழ் ஆசிரியர் குழுவைத் தொடர்புகொண்டு கேட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அவர்களுக்கு அனுப்பினோம். அதற்கு அவர்கள், "இப்படி எந்த ஒரு ஆய்வையும் பிபிசி நடத்தவில்லை" என்று கூறினர்.

எந்த மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவு என 2019ல் வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். அப்போது சி-வோட்டர் (C-Voter) பிரதமரின் செயல்பாடுக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என மாநிலங்கள் அளவில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருப்பது தெரிந்தது. இந்த செய்தியை, thequint.com என்ற ஊடகம் 2019ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி பதிவிட்டிருந்தது. அதில், தெற்கு மற்றும் பஞ்சாபில் மிகக் குறைந்த அளவில் விரும்பப்படும் தலைவராக மோடி உள்ளார். தமிழ்நாட்டில் 2.2 சதவிகிதம் பேரும் கேரளாவில் 7.7 சதவிகிதம் பேரும் பிரதமர் மோடியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: thequint.com I Archive

நாடு முழுக்க உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 60 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். தொகுதிக்கு தோராயமாக 100 – 110 பேர். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 4310 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கலாம்.

நம்முடைய ஆய்வில் பிரதமர் மோடியை 98 சதவிகித தமிழக மக்கள் வெறுக்கின்றனர் என்று பிபிசி எந்த ஒரு ஆய்வறிக்கையையும் வெளியிடவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது சி-வோட்டர் என்ற நிறுவனம் பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது என்று ஆய்வு நடத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 97.8 சதவிகிதம் பேர் மோடியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று மதிப்பளித்துள்ளனர் எனக் கூறியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு 2021ல் வெளியானது இல்லை என்றும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ. ரூ.47 கோடி செலவானது என தி.மு.க அரசு அறிக்கை அளித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டில் 98% பேர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False