‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று- பாஜக அண்ணாமலை,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோ கொண்டுள்ள நியூஸ் கார்டில், ‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று. இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை – பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என்று பார்த்தால், போலியாக உருவாக்கப்பட்டது என்பதுதான் பதில். இதுபற்றி நாம் தந்தி டிவி தரப்பில் விளக்கம் கேட்டபோது, இது நாங்கள் உருவாக்கியதில்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி போலியாக பகிரப்படும் நியூஸ் கார்டு என்றனர்.
அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

இதற்கடுத்தப்படியாக, அண்ணாமலை தரப்பில் விசாரிக்க முயன்றோம். பாஜக.,வின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி, நிர்மல் குமாருக்கு அனுப்பி விளக்கம் கேட்டோம். ‘’இப்படி எங்கேயும் அண்ணாமலை பேசவில்லை. இது போலியான செய்தி,’’ என்று கூறினார்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பற்றி பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False