
‘’தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார்.
இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் உலா வரும் பட்டண பிரவேசம் நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் சார்பாக, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்தனர். பின்னர் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இப்படி முன்னுக்குப் பின் முரணாக அரசு செயல்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
News 18 Tamil Link I OneIndia Tamil Link I Asianet Tamil Link
இதன் பின்னணியில்தான் மேற்கண்ட வகையில், சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
உண்மையில், இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு மற்றும் சிபிஎம் கட்சி தரப்பில் விசாரித்து, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, விமர்சனத்திற்காக கேலி செய்யும் நோக்கில் மேற்கண்ட நியூஸ் கார்டை சிலர் தயாரித்து பகிர, அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவோம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
