‘’காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும்’’ என்று டைனிக் பாஸ்கர் ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல்பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதனையே சிலர் தமிழில் மொழிமாற்றம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்வதையும் கண்டோம்.

இதில், ‘’நீல்சன் – டைனிக் பாஸ்கர் மெகா கருத்துக் கணிப்பு வெளியானது! தென் இந்தியாவை முழுமையாகக் கைப்பற்றும் இந்தியா கூட்டணி! நீல்சன் – டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பின்படி நாடுமுழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி 326 இடங்களிலும் பாஜக தலைமையலான என்.டி.ஏ. கூட்டணி 194 இடங்களிலும், மற்றவை 23 இடங்களையும் கைப்பற்றும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், டைனிக் பாஸ்கர் ஊடகம் ஏதேனும் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதா, என்று தகவல் தேடினோம். ஆனால், அவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, நாம் அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தபோது,’’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி. இதனை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறி பதிவிட்டிருந்தனர்.

Archive

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கருத்துக் கணிப்பை, டைனிக் பாஸ்கர் ஊடகம் வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி’ என்று டைனிக் பாஸ்கர் ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False