FACT CHECK: கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று ஒரு நியூஸ் சார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் – சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி” என்று இருந்தது. இந்த பதிவை Joseph என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 13 அன்று பதிவிட்டிருந்தார்.

சன் நியூஸ் வெளியிட்டது போலவும் இதே தகவல் பகிரப்பட்டு வருகிறது. இவற்றை பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு எளிப்போம் என்று அ.தி.மு.க கூறியிருந்தது. அதன்படி ஆதரவு அளித்து மசோதா நிறைவேற உதவியது. இந்த சூழலில், கொடநாடு கொலை வழக்கு விசாரணை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியதாக சமூக ஊடகங்களில் இந்த நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வெளியிடும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், “கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார்” என்ற பகுதி மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இதன் மூலம் இது போலியான நியூஸ் கார்டு என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் இதை பலரும் ஷேர் செய்து வரவே, இது போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதில், “நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும்” என்று இருந்தது. இதை எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது.

Archive

மேலும், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், “நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து வெளியிட்டுள்ளனர். இது போலியானது” என்றார்.

அடுத்ததாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதுவும் எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. அசல் நியூஸ் கார்டில், “சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு! நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது; எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக வெளிநடப்பு” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது வழக்கம். அப்படி வெளிநடப்பு செய்த போது எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் என்பதை அறிய வீடியோ பதிவை தேடி எடுத்தோம். அதிலும் அவர் நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு என்று கூறினார். மற்றபடி கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை என்பது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி தொடர்பாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False