
விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் பிரசாரத்துக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “விழுப்புரம் மாவட்ட திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். எங்கள் கட்சிக் கொடியுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என்ற காரணத்தினால் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துகின்றனர் விசிக வன்னியரசு வேதனை!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டை அருள் மலர் என்பவர் 2021 மார்ச் 21 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க-வினர் பிரசாரத்துக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வானூர் தொகுதியில் போட்டியிடும் வன்னியரசு கூறியதாக பரவும் தகவலை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இது வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு ஃபாண்ட் இல்லை. மேலும், தந்தி டி.வி பின்னணி வாட்டர் மார்க் டிசைன் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது. ஏராளமானோர் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மையில் வன்னியரசு இப்படி எதுவும் பேட்டி அளித்துள்ளாரா, கருத்து தெரிவித்துள்ளாரா என்று அறிய அவரது சமூக ஊடக பக்கத்தைப் பார்த்தோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலி என குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். அதில், “வானூர் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் எப்படி தேர்தல் களப்பணி ஆற்றுகிறார்களோ அப்படிதான், திராவிட முன்னேற்றக்கழகத்தைச்சார்ந்த செயல்வீரர்கள் களமாடி வருகிறார்கள். வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், விடுதலைச்சிறுத்தைகளை விட தீவிரமாக செயல்பட போட்டிப் போட்டுக்கொண்டு களமாடி வருகிறார்கள். அதனால், அதிமுகவினர் தோல்வி பயத்தில் இப்படியான பொய்ச்செய்தியை பரப்பி வருகின்றனர். அவதூறு, பொய்,பணம், அதிகார முறைகேடுகள், குண்டர்கள் போன்றவற்றை மட்டுமே நம்பி அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் நிற்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான நாங்கள் மக்களை நம்பி மட்டுமே நிற்கிறோம். வென்றெடுப்போம் தமிழ்நாட்டை….” எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
உண்மையில் தந்தி டி.வி இப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டு, அதை போலி என்று வன்னியரசு கூறுகிறாரா, அல்லது உண்மையிலேயே இது போலியானதுதானா என்று அறிய முதலில் தந்தி டி.வி சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். தந்தி டி.வி ஃபேஸ்புக் பக்கத்தில் இதே நியூஸ் கார்டை ஃபேக் நியூஸ் என்று குறிப்பிட்டு அவர்களும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. எனவே, இது போலியானதுதான், தந்தி டி.வி அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்பதும் உறுதியானது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் அடிப்படையில் பிரசாரத்துக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்க மறுப்பதுடன், ஊருக்கு வெளியே நிறுத்தி அவமரியாதை செய்கிறது என்று வன்னியரசு கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க-வினர் பிரசாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை; வன்னியரசு வேதனையா?- பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Altered
