‘’நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’நெல்சன் க்கு ரஜினி யால் ஏற்ப்பட்ட விபரீதம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை. ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் விசாரணை; அடுத்தகட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் காவல்துறை திட்டம் எனத் தகவல்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link l Claim Link

News 18 Tamil லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என நாம் விவரம் தேடினோம். அப்போது, இது போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது.

உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

இதுதொடர்பாக, News 18 Tamil தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED