FACT CHECK: வன்னியர்களை தவறாக சித்தரிக்க திமுக பணம் கொடுத்தது என்று ஜெய்பீம் பட இயக்குநர் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்க தி.மு.க பணம் கொடுத்தது என்று அந்த படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா தகவல்! வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுக தான்! ரசிகர் ஒருவர் இயக்குனரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது திமுக தலைமை தான் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் படி காட்சி படுத்த கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்! வன்னியர் – தலித் மோதலை உருவாக்க பல கோடி கைமாறியதாகவும் ஒப்புதல்” என்று இருந்தது. இந்த பதிவை விழுப்புரம் மாவட்ட பாமக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 நவம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை பார்க்கும்போது புதிய தலைமுறை வெளியிட்டது போன்று இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மேலும், ஊர், பெயர் தெரியாத ஒருவர் கூறியதன் அடிப்படையில் எல்லாம் செய்தி வெளியிட வாய்ப்பில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். நடிகர் சூர்யா சமீபத்தில் மரணம் அடைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய செய்தி வெளியாகி இருந்தது. ஜெய்பீம் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது பொலியானது என்று உறுதி செய்தார்.

ஜாதி மோதல் ஏற்பட தி.மு.க தான் பணம் கொடுத்தது என்று இயக்குநர் ஞானவேல் கூறியிருந்தால் அது தொடர்பாக செய்தி வெளியாகி இருக்கும். தமிழக ஊடகங்கள் மறைக்கிறது என்று குற்றம் சாட்டினாலும், குறைந்தபட்சம் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆதரவு ஊடகங்களிலாவது செய்தி வெளியாகி இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம், தமிழகத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டை போலியாக உருவாக்கியிருப்பது உறுதியாகிறது.

முடிவு:

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்க தி.மு.க பணம் கொடுத்தது என அப்படத்தின் இயக்குநர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வன்னியர்களை தவறாக சித்தரிக்க திமுக பணம் கொடுத்தது என்று ஜெய்பீம் பட இயக்குநர் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False