‘அண்ணாமலை மீது போக்சோ வழக்கு’ என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதா?
‘‘அண்ணாமலை மீது போக்சோ வழக்கு உள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மேலுள்ள போக்சோ, 2 கிரிமினல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும். கர்நாடக குற்றவியல் நீதிமன்றம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற உள்ளதால், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பற்றி வித விதமான வதந்திகள் பகிரப்படுகின்றன.
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்திதான் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள நியூஸ் கார்டும்…
இதனை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. நாம் இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘’இது நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தார்.
மேலும், அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் நமக்குக் கிடைத்தது. அதனை எடிட் செய்துதான், இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘அண்ணாமலை மீது போக்சோ வழக்கு’ என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Altered