
‘’தமிழ் டிவி சேனல்களுக்கு அண்ணாமலை மிரட்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி செய்து, சிறுவர்கள் பேசியதாகக் கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இதன்பேரில், பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களின் வழியே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி ஜீ தொலைக்காட்சி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அண்ணாமலை பற்றி பலவிதமான நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் நிறைய போலியான செய்தியாகவே உள்ளன. நாமும் அவை பற்றி ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்திதான் மேற்கண்ட நியூஸ் கார்டும். உண்மையில், கதிர் நியூஸ் இப்படி செய்தி வெளியிடவில்லை.

Kathir News Tweet Link I Archived Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தமிழ் டிவி சேனல்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
