FactCheck: மோடி கண்ணீர் விட்டதை விமர்சித்து மன்மோகன் சிங் ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’மோடி கண்ணீர் விட்டது பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இந்த செய்தி ஊடகங்களில் கூட வெளியாகியுள்ளது.

Livemint Link I ThePrint Link

இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட ட்வீட்டர் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது உண்மையான ட்விட்டர் ஐடியா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

இதில் உள்ள ட்விட்டர் ஐடியின் புரொஃபைல் (@PManmohansingh) சென்று பார்த்தால், fan account எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மன்மோகன் சிங் பெயரில் இயங்கும் போலியான ஒரு ட்வீட்டர் ஐடி வெளியிட்ட பதிவை, உண்மை என நம்பி மக்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி கண்ணீர் விட்டது பற்றி மன்மோகன் சிங் விமர்சித்து ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False