
‘’மோடி கண்ணீர் விட்டது பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இந்த செய்தி ஊடகங்களில் கூட வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட ட்வீட்டர் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது உண்மையான ட்விட்டர் ஐடியா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

இதில் உள்ள ட்விட்டர் ஐடியின் புரொஃபைல் (@PManmohansingh) சென்று பார்த்தால், fan account எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மன்மோகன் சிங் பெயரில் இயங்கும் போலியான ஒரு ட்வீட்டர் ஐடி வெளியிட்ட பதிவை, உண்மை என நம்பி மக்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடி கண்ணீர் விட்டது பற்றி மன்மோகன் சிங் விமர்சித்து ட்வீட் வெளியிட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
