
‘’பேராணம்பட்டு பகுதியில் மழை, வெள்ளத்தில் பசு மாடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாடுகள் அடித்துச் செல்லப்படுவதாகக் கூறி மேற்கண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இதேபோல சிலர் இதனை திருப்பதியில் நிகழ்ந்த சம்பவம் என்றும் கூறி பகிர்கின்றனர்.
உண்மையில், இது கடந்த 2020ம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் உள்ள Nayarit – Zacaulpan என்ற இடத்தில் நிகழ்ந்ததாகும். இதுபற்றி அந்நாட்டு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
La Voz Del Pueblo FB Post Link
இதே வீடியோவை மற்றொரு கோணத்தில், பிரேசில் ஊடகம் ஒன்றும் பகிர்ந்திருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, மெக்சிகோவில் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்து, பலரும் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என வித விதமாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்?- மெக்சிகோவில் எடுத்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்…
Fact Check By: Pankaj IyerResult: False
