மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் பெட்டியில் கசியும் தண்ணீர்?- வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் தண்ணீர் ஒழுகும் பரிதாபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Claim Tweet Link I Archived Link

உண்மை அறிவோம்:

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில், வந்தே பாரத் என்ற பெயரில் வர்த்தக பயன்பாட்டுக்கான அதிவேக ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது. இந்த ரயில்களை நாடு முழுவதும் முக்கியமான 6 வழித்தடங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, 2019ம் ஆண்டு முதல் வந்தே பாத் யல் சேவ டெல்லி – வாரணாசி இடையே மேற்கொள்ளப்பட்டது. படிப்படியாக, இந்த வந்தே பாரத் ரயில் திட்டத்தின் 5வது வழித்தட சேவை 2022 நவம்பர் மாதத்தில் சென்னை – மைசூரு இடையே தொடங்கப்பட்டது. இதன்போது, வழியில் கால்நடைகள் மோதி ரயிலின் முகப்புப் பகுதி சேதமடைந்தது. அதனால், பலரும் வந்தே பாரத் ரயில்களை கேலி செய்தனர். 
இதுபற்றி அப்போது பரவிய சில தகவல்களை நாமும் ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம்.
Fact Crescendo Tamil Link 1 l Link 2

இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவைத் திட்டத்தின் 6ம் கட்ட முயற்சியாக, தற்போது 11.12.2022 அன்று பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 


இந்த பின்னணியில்தான் மேற்கண்ட வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வந்தே பாரத் ரயிலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால், பயணிகள் படுக்க வழியின்றி அவதியுற்றதாக, தகவல் பரப்பி வருகின்றனர்.

ஆனால், இந்த வீடியோ 2019ம் ஆண்டு முதலாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது வேறொரு ரயில் (Bengaluru-Patna Sanghmitra Express) தொடர்பான விவகாரம். 

ABP Live Link I Indian Express link

அதேசமயம், வந்தே பாரத் ரயில்களில் இந்த வீடியோவில் வருவதைப் போன்ற படுக்கை வசதிகள் எதுவும் இல்லை. ஏசி வசதியுடன் கூடிய இருக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இது கிட்டத்தட்ட பயணிகள் ரயில் போன்றதாகும். 

இந்த அடிப்படை உண்மை எதுவும் தெரியாமல் சிலர் மேற்கண்ட வகையில், வந்தே பாரத் ரயிலின் உள்ளே தண்ணீர் கசிவதாக, வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் பெட்டியில் கசியும் தண்ணீர்?- வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING