FactCheck: வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம் என்று பகிரப்படும் வதந்தி…

இந்தியா சமூக ஊடகம்

‘’வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

‘’வடநாட்டின் லட்ச்மண்புரா தர்ஹாவில் ரோடு அகலப்படுத்தும்போது வெளிப்பட்ட 300 வருட பழமையான அழியாத ஜனாஸா,’’ என்று கூறி மேற்கண்ட தகவலை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டார்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது 2019ம் ஆண்டிலேயே பகிரப்பட்டதை கண்டோம். 32 ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய துறவி ஒருவரின் உடல் மழையால் சேதமடைந்தது என்றும், அதனை தோண்டியெடுத்தபோது உடல் இவ்வாறு அழியாமல் இருந்தது என்றும் சில செய்திகளில் கூறியிருந்தனர்.

dainikekattorbangladesh link

தொடர்ந்து தேடியபோது, இதுதொடர்பான வேறு செய்தி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, குறிப்பிட்ட புகைப்படம் வெவ்வேறு தகவல்களை சேர்த்து பகிரப்படுவதாக, தெரியவருகிறது. 300 ஆண்டுகள் அழியாமல் இருந்த சடலம் எனக் கூறி இதுபற்றி பரவும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம் என்று பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False