செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சொற்பொழிவாளர் சுகி சிவம் கருத்து கூறியுள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர். 

ஆனால், ‘’இவ்வாறு நான் எங்கேயும் பேசவில்லை,’’ என்று சுகி சிவம் மறுப்பு வெளியிட்டுள்ளார். 

இதுதவிர மேற்கண்ட நியூஸ் கார்டில் U2Brutus என்ற யூடியுப் சேனல் லோகோவும் இடம்பெற்றுள்ளது. எனவே, அவர்கள் தரப்பில் ஏதேனும் மறுப்பு கூறியுள்ளனரா என்று விவரம் தேடினோம். அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி ஏற்கனவே விளக்கம் வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

Written By:  Fact Crescendo Team 

Result: False