‘’2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும்,’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளார்’’ என எழுதியுள்ளனர். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக பெற உள்ள வாக்கு வெற்றி வித்தியாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போன்று, பிரசாந்த் கிஷோர் ஏதேனும் கருத்துக் கணிப்பு வெளியிட்டாரா என தகவல் தேடியபோது, இவ்வாறு எதுவும் செய்தி காணக் கிடைக்கவில்லை.

அதேசமயம், பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பான தனது கணிப்புகளை இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்தப்படியாக, மாநிலங்கள் வாரியாக, எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது பற்றியும் அவர் கருத்து கூறியுள்ளார்.

மோடி பற்றியும் கருத்து கூறியுள்ளார்.

இதுதவிர, தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

India Today Link

ஆனால், மேற்கண்ட பேட்டிகளில் அவர் எங்கேயும் அதிமுக 40 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கவில்லை.

இறுதியாக, நாம் பிரசாந்த் கிஷோர் அலுவலகத்தை (9121691216) தொடர்பு கொண்டோம். அவர்கள், ‘’40 இடங்களிலும் அதிமுக வெல்லும் என்று நாங்கள் கூறவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் முடிந்ததும், தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி முக்கிய சக்தியாகவும், இன்னொரு கட்சி வலுவிழந்த நிலையிலும் இருக்கும் என்றுதான் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்,’’ என்றனர்.

இதன்மூலமாக, பிரசாந்த் கிஷோர் அதிமுக ஆதரவாக, கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, எழுத்துப் பிழைகளுடன் போஸ்டர் தயாரித்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False