
கூடுவாஞ்சேரி மழை நீரில் முதலை வந்ததால் பரபரப்பு என்று கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் வேகமாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதேபோல, வீடியோ ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
முதலை மிதப்பது போல உள்ள புகைப்படம், உண்மையில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. அது தாய்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் குறிப்பிட்டு, இணையத்தில் ஏற்கனவே பகிரப்பட்டு வருகிறது.
அதற்கடுத்தப்படியாக, கூடுவாஞ்சேரியில் முதலை மிதப்பதாகக் கூறி பகிரப்படும் வீடியோவில் இருப்பது உண்மையில் மரக்கட்டை ஆகும். மழை நீரில் பாதாள சாக்கடை உள்ள இடத்தில் ஏற்பட்ட சுழல் காரணமாக, அந்த மரக்கட்டை சுழன்றதை தொலைவில் இருந்து பார்த்த யாரோ ஒருவர் முதலை என வீடியோ எடுத்து வதந்தி பரப்பியுள்ளார். சிலர் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் என்றும், ஒருசிலர் வல்லாஞ்சேரி கூட்ரோடு என்றும் குறிப்பிட்டு, இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
