
‘’திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் சாலையில் படர்ந்த அதிசயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை நாம் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, அதில், மேகக்கூட்டம் போன்றில்லாமல், எதோ காற்று மாசு (புகைமூட்டம்) போல இருப்பதைக் கண்டோம். எனவே, இதில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் தகவல் தேடினோம்.
அப்போது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று விவரம் கிடைத்தது. சீனாவில் மேகம் தரையில் தவழும் காட்சி எனக் குறிப்பிட்டு, ட்விட்டரில் இதனை முதலில் பகிர்ந்திருப்பதைக் கண்டோம்.
ஆனால், இது மேகக்கூட்டம் இல்லை என்ற சந்தேகம் மேலும் அதிகரிக்கவே, நாம் தொடர்ந்து விவரம் தேடினோம். அப்போது, இதுபற்றி ABP News வெளியிட்ட செய்தி ஒன்றை காண நேரிட்டது. அதில், ‘’இது மேகக்கூட்டம் இல்லை, இது ஒரு மணற்புயல் என்று வானிலை ஆராய்ச்சியாளர் மகேஷ் பலாவட் என்பவரிடம் பேசி தெளிவுபடுத்தப்பட்டது,’’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், எங்கே நிகழ்ந்தது என்ற விவரம் கூறப்படவில்லை.
ABP News Live Link
வட இந்திய மாநிலங்கள், சீனா, மங்கோலியா, அரபு நாடுகள் போன்ற மத்திய கிழக்காசிய பிராந்தியம், ஆப்ரிக்க நாடுகள், அமெரிக்கா என உலகம் முழுக்க, இதுபோன்ற மணற்புயல் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வுதான். அப்படி ஒரு இடத்தில் நிகழ்ந்த மணற்புயல் நிகழ்வை எடுத்து, மேகம் தரையில் தவழ்ந்த அரிய காட்சி என வதந்தி பரப்பியுள்ளனர்.
முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் என்று பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Fact Crescendo TeamResult: False
