தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது’’ என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டில் ஜெயா பிளஸ் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளது. இதில், உள்ளதைப் போல, திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இது பொய்யான செய்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. 

இதன்பேரில், நாம் ஜெயா பிளஸ் ஊடகத்தின் சமூக வலைதள பக்கம் சென்று தகவல் தேடினோம். அப்போது, ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் போலியான ஒன்று,’’ என அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதைக் கண்டோம். 

அடுத்தப்படியாக, ஜெயா பிளஸ் தரப்பில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி சில நாட்கள் முன்பாக வெளியான ஒரு நியூஸ் கார்டை கீழே இணைத்துள்ளோம்.

இந்த நியூஸ் கார்டை எடிட் செய்துதான் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False