‘’அப்துல் கலாம் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிச் சென்று வீடு வீடாக பேப்பர் போடும் வேலை பார்த்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள், ராமேஸ்வரத்தில் சிறு வயது காலத்தில் பேப்பர் போடும் வேலை பார்த்தது என்னவோ உண்மைதான். அதற்காக, அப்போது எடுத்த புகைப்படம் இது என்று கூறுவது தவறாகும்.

அவர் பேப்பர் போடும் வேலை பார்த்தது, 1940ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், அப்துல் கலாம் கிடையாது. இதனை 2011ம் ஆண்டில் The Hindu ஊடகம் வெளியிட்டது. அந்த செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

The Hindu Article Link

கடந்த 2011ம் ஆண்டில் தி இந்து ஊடகம் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை எடுத்து, மேற்கண்ட வகையில் இவர்தான் அப்துல் கலாம் என்று குறிப்பிட்டு பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர்.

நமது மலையாளம் மொழியில்கூட இதுபற்றி ஏற்கனவே செய்த வெளியிடப்பட்டுள்ளது.

Fact Crescendo Malayalam Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இந்த பேப்பர் போடும் சிறுவன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லை; முழு விவரம் இதோ!

Fact Check By: Fact Crescendo Team

Result: False