‘’ பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு’’ என்று என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link l Archived Link

ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதிய பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம், துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து, மத்திய அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் Central Vista Redevelopment Project மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, இந்த வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.


அதேசமயம், இந்நிகழ்வுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இந்த சூழலில், மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கக்கூடாது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக சமூக வலைதளங்களில் மேற்கண்ட வகையில் செய்தி பரவுகிறது.

ஆனால், இது தவறான தகவல். உண்மையில் குருமூர்த்தி இவ்வாறு பேசவில்லை. அவரே இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.


இதேபோன்று நாம் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False