‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ரயில் வந்து நூறு வருடங்கள் ஆகிறது.

ஆனால் இந்த நிலையத்தை பள்ளிவாசல்அருகில் இருந்து மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள மகிஷாஷூர் ரயில் நிலையம், ரயில் விசில் சத்தம் அவர்களின் பிரார்த்தனைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அழிக்கப்பட்டது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவில் கூறியுள்ளது போன்று, இது மேற்கு வங்க மாநிலம், Naopara Mahishasur ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்ற வன்முறை சம்பவமா என்று தகவல் தேடினோம்.

அப்போது, ரயில் சத்தம் பொறுக்காமல் யாரும் அந்த ரயில் நிலையத்தை சூறையாடவில்லை என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பானது என்றும் தெரியவந்தது.

இந்த வீடியோவில் மேற்கண்ட ரயில் நிலையத்தை சூறையாடும் பொதுமக்கள் கூட்டம் NRC மற்றும் மோடிக்கு எதிராகக் கோஷமிடுவதை கேட்க முடிகிறது. இதே வீடியோவின் மற்றொரு பகுதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளை இங்கே 1 மற்றும் இங்கே 2 காணலாம்.

இதுதவிர, கூடுதல் செய்தி ஆதாரங்கள் இதோ…

Bartamanpatrika l Business Today link

எனவே, 2019ம் ஆண்டு நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வீடியோவை எடுத்து, முஸ்லீம் ஜிகாதிகள் வேண்டுமென்றே மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை அடித்து நொறுக்குவதாகக் கூறி தவறான தகவல் பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading