ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு உடையில் வந்தனரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

கடந்த 2020ம் ஆண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.நிலைத் தகவலில், “ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே. 🤬🤬 ஆகஸ்ட் 5, 2020 அன்று, ஸ்ரீ ராம் ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது, ​​காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது 2023 நவம்பர் 15ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல்நாட்டு விழா நடந்த ஆகஸ்ட் 5, 2020 அன்று நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்திருந்தனர் என்று குறிப்பிட்ட சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தேதி உண்மைதான். புகைப்படம் உண்மையா என்பதை அறிய இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக பல செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive

2022 ஆகஸ்ட் 5 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியுடன் கூடிய புகைப்படத்தில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக குடியரசுத் தலைவா; மாளிகை நோக்கி கருப்பு உடை அணிந்து பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி-க்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமின்றி பல ஊடகங்களிலும் இந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

ஆனால், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது. இந்த புகைப்படமோ விலைவாசி உயர்வைக் கண்டித்து 2022 ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது. இதற்கும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கும் தொடர்பில்லை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ல் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரங்களுக்காக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படத்தை தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு உடையில் வந்தனரா?

Written By: Chendur Pandian 

Result: False