
‘’கொரோனா தடுப்பூசி போடுகிறேன் என்ற பெயரில் இந்திய மக்களை ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

நர்ஸ் ஒருவர், தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போடுவது போல, பயனாளரின் உடலில் வெறும் ஊசியை மட்டும் குத்தி விட்டு, பிறகு மருந்தை செலுத்தாமல் திருப்பி எடுத்துக் கொள்வதை, மேற்கண்ட வீடியோ பதிவில் காண முடிகிறது.
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே நமக்கு அனுப்பி, ‘இது இந்தியாவில் நடைபெற்றதா’ என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்று கூகுள் உதவியுடன் தகவல் தேடியபோது, இது மெக்சிகோவில் நிகழ்ந்தது எனக் குறிப்பிட்டு வெளியான நிறைய செய்திகளை காண முடிந்தது.
மெக்சிகோ அரசு சார்பாக, பொதுநல சுகாதாரப் பணிகளை செய்துவரும் Mexican Institute of Social Security (IMSS) ஏற்பாடு செய்திருந்த, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஒன்றில், இத்தகைய மோசடி வேலையில் ஒரு செவிலியர் ஈடுபட்டதாகவும், இதன் பேரில் அவரை உடனடியாக பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
இதுபற்றி IMSS ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
இதேபோல, மற்றொரு வீடியோவும் பரவி வருகிறது. அதுவும், இந்தியாவுடன் தொடர்புடையது அல்ல.
எனவே, இந்தியாவிற்கு தொடர்பில்லாத நிகழ்வுகளை எடுத்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிர்ந்துள்ளனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Title:இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்களை ஏமாற்றுகின்றனரா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
