
கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று நடிகர் மயில்சாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி – நடிகர் மயில்சாமி” என்று இருந்தது.
இந்த பதிவை Next cm TTV என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், அவரை விமர்சித்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் எடப்பாடி பழனிசாமி நடிக்கிறார் என்று பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். பார்க்கும்போதே போலியானது என்று தெரிந்தது. பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் ஏபிபி நாடு இணையதள ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. ஆனால், “விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் வரும்; அனைவரும் தயாராக இருக்க வேண்டும் – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி” என்று ஒரு நியூஸ் கார்டு இருந்தது.
இந்த நியூஸ் கார்டில் இருந்த தமிழ் ஃபாண்டும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் இருந்த தமிழ் ஃபாண்டும் வித்தியாசமாக இருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை போலியாக உருவாக்கியிருப்பது உறுதியானது.
இதை மேலும் உறுதி செய்ய, ஏபிபி நாடு ஊடகத்தை தொடர்புகொண்டு கேட்டோம். “இதை நாங்கள் வெளியிடவில்லை, போலியானது” என்று அவர்களும் உறுதி செய்தனர்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து நடிகர் மயில்சாமி ஏதும் கருத்து கூறியுள்ளாரா, அது பற்றி ஊடகங்களில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியாக உருவாக்கப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொடநாடு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மன நலம் பாதிக்கப்பட்டது போல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்று நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:எடப்பாடி பழனிசாமி மன நலம் பாதித்தது போல நடிக்கிறார் என்று நடிகர் மயில்சாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
