
‘’ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த புகைப்படத்தை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்ததைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுவதால், முன்னாள் ஆட்சியில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்டோர் கடுமையான கண்காணிப்பில் உள்ளனர்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, கடைசியாக கடந்த மே மாதத்தில் பொதுவெளியில் காட்டப்பட்டார். அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

Aljazeera Link I Archived Link
உண்மை இப்படியிருக்க, இணையதளத்தில் கிடைக்கப்பெறும் ஒரு மாடல் புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, இதுதான் ஆங் சான் சூகி சிறையில் இருக்கும் புகைப்படம் எனக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர்.
ஆம். உண்மையான புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

உண்மையான புகைப்படத்தையும், குறிப்பிட்ட எடிட் செய்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு கீழே இணைத்துள்ளோம்.

உரிய ஆதாரங்களின் படி நாம் ஆய்வு செய்த புகைப்படம் எடிட் செய்த ஒன்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டாரா? எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: Altered
