
‘’நள்ளிரவில் நகர்வலம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
காசி (வாரணாசி) நகரில் இரவு நேரத்தில் வெளியே சென்ற மோடியை கண்டித்து, பொதுமக்கள் கோஷமிட்டனர் என்று மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பலரும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த பின்னணியில்தான், மேற்கண்ட வீடியோவும் பகிரப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும். அதில் வரும் மோடிக்கு எதிரான கோஷங்கள், டிஜிட்டல் முறையில் எடிட் செய்து, சேர்க்கப்பட்டதாகும். உண்மையில், வாரணாசி மக்கள் அவ்வாறு கோஷமிடவில்லை.
இந்த வீடியோ, கடந்த டிசம்பர் 14, 2021 அன்று வாரணாசியில் நடைபெறும் உள்கட்டுமானப் பணிகளை மோடி பார்வையிட்டபோது எடுக்கப்பட்டதாகும். அதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அவற்றை கீழே இணைத்துள்ளோம்.
உண்மையான வீடியோவையும், எடிட் செய்த வீடியோவையும் ஒப்பீடு செய்து, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டார்களா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
