ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டில் மாலை மலர் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளது. இதில், உள்ளதைப் போல எடப்பாடி பழனிசாமி கூறியதாக, எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இது பொய்யான செய்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. 

இதன்பேரில், நாம் மாலை மலர் ஊடகத்தின் சமூக வலைதள பக்கம் சென்று தகவல் தேடினோம். அப்போது ஏற்கனவே அவர்கள் எடப்பாடி பழனிசாமி பற்றி வெளியிட்ட ஒரு செய்தி காண கிடைத்தது. 

இந்த நியூஸ் கார்டை எடிட் செய்துதான் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

கூடுதல் ஆதாரத்திற்காக நாம் மாலை மலர் ஊடகத்தின் ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Fact Crescendo Team 

Result: ALTERED