
‘’பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு செய்தோம் என்று 8 பாதிரிகள் வாக்குமூலம்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Murali Ram என்பவர் இந்த பதிவை ஜூலை 7, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, 8 பாதிரியார்கள் ஒன்று சேர்ந்து, எங்கேயும் பாவ மன்னிப்பு கேட்டு வந்த பல பெண்களை பலாத்காரம் செய்தனரா என தகவல் தேடினோம். அப்போது, இவர்கள் குறிப்பிடுவதைப் போல ஒரு சம்பவம் கேரளா மாநிலத்தில் நடந்ததாக, தெரியவந்தது.

கடந்த 2018 ஜூன் மாதத்தில் கேரளாவின் கோட்டயம், திருவல்லா பகுதியை சேர்ந்த தேவாலயம் ஒன்றில், பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை, 5 பாதிரியார்கள் ஒன்று சேர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
இதன்படி, பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கியவர்கள் 5 பாதிரியார்கள் ஆவர். 8 பேர் இல்லை. ஆனால், இப்படியான சம்பவம் நடைபெற்றது உண்மைதான். அதேசமயம், இது கடந்த ஆண்டில் நடைபெற்றதாகும். தற்போது நடைபெறவில்லை. இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவலில், பாதி உண்மை, பாதி தவறு உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களிடம் உடலுறவு செய்தோம்: 8 பாதிரியார்கள் வாக்குமூலம்?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
