
‘’சாத்தான்குளம் விவகாரத்தில் எஸ்பிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

‘’சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு SBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக, இதில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி பார்ப்பதற்கு, எதோ ஒரு தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல தோன்றுகிறது. ஆனால், எந்த தொலைக்காட்சி இதனை வெளியிட்டது என்ற விவரம் எதுவும் இல்லை. ஒரு ஓரத்தில், DMK IT Wing எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்தால், திமுக அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலாகவே தெரிகிறது. ஒரு அதிகாரப்பூர்வ தகவலில் இப்படி தவறு இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.
மேலும், இதில் உள்ள ஃபாண்ட் வித்தியாசமாக தெரிகிறது.

எனவே, சமீபத்தில் குறிப்பாக, கடந்த 2 நாட்களில் ஸ்டாலின் பற்றி ஏதேனும் செய்தியை DMK IT WING ட்விட்டரில் வெளியிட்டுள்ளதா, என்ற விவரம் தேடிப் பார்த்தோம்.
அப்போது, ஜூன் 29, 2020 அன்று வெளியான ஒரு செய்தியை கண்டோம். ‘’கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க பலமுறை கேட்டும், அதிமுக தலைமையிலான தமிழக அரசு முன்வரவில்லை,’’ என்று ஸ்டாலின் கூறியதாக, அதில் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, மேற்கண்ட செய்தியை எடுத்து, டெம்ப்ளேட்டில் எடிட் செய்து, தவறான தகவலை சேர்த்து பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவைக் கண்டால் என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:எஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
