சீரடி சாய் பாபா டிரஸ்ட் சார்பாக ஹஜ் கமிட்டிக்கு ரூ.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டதா?
‘’சீரடி சாய் பாபா டிரஸ்ட் சார்பாக, ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் .. முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை. ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத ஏழை இந்துக்கோவில்களுக்கு கூட இப்படி கொடுக்கவில்லையே …ஏன்? இப்போதாவது சிந்தியுங்கள்… சாய்பாபா என்பது இந்துக்களை ஏமாற்ற நடத்தப்படும் ஆன்மீக ஜிஹாத்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது ஒரு வதந்தி என்று ஏற்கனவே ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் மறுப்பு கூறியுள்ளதாக, தெரியவந்தது.
ETVBharat Link l Zee News Link l I LOVE SHIRDI
இதன்படி, 2023ஆம் ஆண்டு முதலாக இந்த வதந்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், இதுதொடர்பாக ஷீரடி சாய்பாபா சன்னிதானம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இறுதியாக, நாம் நேரடியாக ஷீரடி சாய்பாபா டிரஸ்ட்டை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘’இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. ஹஜ் கமிட்டிக்கு எந்த நன்கொடையும் நாங்கள் இவ்வாறு வழங்கவில்லை,’’ என்று தெரிவித்தார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:சீரடி சாய் பாபா டிரஸ்ட் சார்பாக ஹஜ் கமிட்டிக்கு ரூ.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: MISLEADING