
‘’பாடகி யோஹானி இந்தியா – இலங்கை கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் பற்றி ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் ஆய்வு செய்து, விரிவான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் பாடகி யோஹானியை பாராட்டி ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறது. இதனை வைத்தே பலரும், யோஹானி புதிய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி செய்தி பரப்பி வருகின்றனர்.
இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் சம்பந்தப்பட்ட இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அப்போது, ‘’பாடகி யோஹானி சமீபத்தில் இந்தியா, இலங்கை மக்கள் பற்றி வெளியிட்ட பாடல் கலாசார ரீதியாக இருநாட்டு மக்களையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதன்மூலமாக, இருநாட்டு மக்களையும் இணைக்கக்கூடிய ஒரு கலாசார தூதுவராக யோஹானி உருவெடுத்துள்ளார் எனும் அர்த்தத்திலேயே அந்த பதிவை எங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தோம். யோஹானியை நாங்கள் கலாசார தூதராக நியமிக்கவில்லை,’’ என்றனர்.
Fact Crescendo Srilanka Tamil Link
எனவே, இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியை தவறாக புரிந்துகொண்டதால், வந்த குழப்பம் இது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:இந்தியா – இலங்கை கலாசார தூதராக பாடகி யோஹானி நியமிக்கப்பட்டதாக பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
