
‘’வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போனது அம்பலமானதால் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வளைகாப்பு விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நாமும் இதுதொடர்பாக ஆய்வு செய்து, ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
இந்த பின்னணியில் மீண்டும் இதேபோன்ற தகவல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மையப்படுத்தி பகிரப்படுகிறது. இதுபற்றி அவரும் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இதேபோல, அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, அவரே இந்த விவகாரம் பற்றி தெளிவாக விளக்கம் அளித்த நிலையில், அவரை குறிவைத்து, பகிரப்படும் இதுபோன்ற தகவல்களில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி வலுக்கட்டாயமாக பகிரப்படும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Misleading
