
‘’எரிபொருள் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதுபற்றி நாம் புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சரவணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இது வழக்கம்போல, எங்களது லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்றார்.
இதனையடுத்து, புதிய தலைமுறை ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடியபோது, அவர்கள் அக்டோபர் 24, 2021 அன்று அண்ணாமலை பற்றி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, திமுக.,வை எச்சரிக்கும் வகையில் அண்ணாமலை பேசிய செய்தியை எடுத்து, மேற்கண்ட வகையில் சிலர் தவறாக எடிட் செய்து, பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்க என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
