FactCheck: மழை நீர் வராமல் தடுக்க பொதுமக்கள் வீட்டின் கேட்களை மூடி வைக்கும்படி மு.க.ஸ்டாலின் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’மழை நீர் வீட்டிற்குள் வராமல் தடுக்க வீட்டின் கதவுகளை மூடி வையுங்கள்,’’ என்று பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இது பலராலும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பகிரப்படுவதைக் கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்டதைப் போல தெரிந்தாலும், இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்வதால், நாம் அதன் நம்பகத்தன்மையை தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இந்த செய்தியை சன் நியூஸ் வெளியிட்டதா என, அவர்களது டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்றனர்.

சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Sun News Link

எனவே, இது போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்பை கேலி செய்யும் நோக்கில் இதுபோல நிறைய வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி ஏற்கனவே நாம் வெளியிட்ட சில செய்திகளை கீழே இணைத்துள்ளோம்.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மழை நீர் வராமல் தடுக்க பொதுமக்கள் வீட்டின் கேட்களை மூடி வைக்கும்படி மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False