
‘’திருநள்ளாறு கோயிலை கடக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழக்கின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்த தகவல் நீண்ட நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது உண்மையிலேயே தவறான ஒன்றாகும். இதுபற்றி இஸ்ரோவில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை ஏற்கனவே தெளிவாக ஊடகப் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதன்பேரில் அவரை ஆதன் தமிழ் என்ற ஊடகம் விரிவான பேட்டி கண்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். ‘’திருநள்ளாறு கோயில் மீது செயற்கைக் கோள்கள் செல்லும்போது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை; அதனை நானே எனது குழுவினரை வைத்து பிரத்யேகமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறேன்,’’ என்று மயில்சாமி அண்ணாதுரை தெளிவாகக் கூறியுள்ளார்.
எனவே, உண்மைத்தன்மை தெரியாமல் சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக இந்த தகவலை பலரும் பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:திருநள்ளாறு மீது பறக்கும்போது செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Misleading
