
‘’ஒரே படுக்கையில் 3 பேர், இதுதான் குஜராத் மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் தொடர்ச்சியாக, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இந்த தகவலை ஷேர் செய்வதைக் கண்டோம்.
இதேபோல, ட்விட்டரிலும் பலர் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்பட பதிவில், 2 புகைப்படங்களை இணைத்துள்ளனர். அதில், முதலாவதாக உள்ள புகைப்படம் பற்றி ஏற்கனவே நாம் ஆய்வு செய்து, விவரம் வெளியிட்டிருக்கிறோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இரண்டாவதாக உள்ள புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை. அது மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாகும். டைம்ஸ் நவ் ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் மேகா பிரசாத், இதுபற்றி வெளியிட்ட ட்வீட் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
இதேபோல, குறிப்பிட்ட மருத்துவமனை பற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்வீட் லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நாக்பூர் அரசு மருத்துவமனையில், ஒரே படுக்கையில் 2, 3 நோயாளிகளை அனுமதித்து, சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இந்தி ஊடகங்களில் வெளியான செய்தி லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாக்பூர் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, குஜராத் எனக் குறிப்பிட்டு, பலரும் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஒரே படுக்கையில் 3 பேர்; குஜராத் மாடல் என்று கூறி பகிரப்படும் நாக்பூர் மருத்துவமனை புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
