
‘’தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமியை உறவினர்கள் சூழ்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு +919049053770 அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை வைரலாக ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
நீட் நுழைவுத் தேர்வுக்குப் பயந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பல விதமாக தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Hindu Tamil Link I Dinamani Link I News18 Tamil Link
இதன்பேரிலேயே மேற்கண்ட நியூஸ் கார்டு பகிரப்படுவதாக தெரிகிறது. உண்மையில், இதனை நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை. இதற்கு மறுப்பு தெரிவித்து, நியூஸ் 7 தமிழ் ஊடகம், அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதுகுறித்து நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா அவர்களிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் மேற்கண்ட போலிச் செய்தியை சிலர் தயாரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தனுஷ் தற்கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: False
