ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு, நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 , +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே நியூஸ் கார்டை மற்றவர்கள் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராதாரவி, ‘’இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்ட்கள் உள்ளனர். ஒருவர் மோடி, இன்னொருவர் அமித் ஷா,’’ என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

IE Tamil Article Link

இதுதொடர்பாக, பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவை பற்றி ஒவ்வொன்றாக நாமும் ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Article Link

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான், மேற்கண்ட நியூஸ் கார்டும். உண்மையில், இதனை தந்தி டிவி வெளியிடவில்லை. இது தந்தி டிவி பெயரில் வேண்டுமென்றே சிலர் தயாரித்து பகிர்ந்து வரும் போலியான செய்தியாகும். இதுபற்றி நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் இப்படியான கோரிக்கை எதுவும் வெளியிடவில்லை. பாஜக ஐடி பிரிவு தரப்பிலும் இதுபற்றி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False