‘’அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு வைரலாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழகத்தில் மது விற்பனையை அரசே நேரடியாக மேற்கொண்டு வருகிறது. திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறினாலும் டாஸ்மாக் விற்பனையில் எந்த மாறுதலும் இல்லை. இது பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ள நிலையில், இளைஞர்கள் மட்டுமின்றி, பெண்களும் மதுவுக்கு அடிமையாக மாறிவருவதால், பெரும் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பலரும் அவ்வப்போது கோரிக்கை வைப்பதுடன், போராட்டங்கள் நடத்துவதும் வழக்கம்.

சில ஆண்டுகள் முன்பாக, காந்தியவாதி சசிபெருமாள் என்பவர் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பலகட்டங்களாகப் போராட்டம் நடத்தி, இறுதியில் உயிரை விட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த சூழலில், மேற்கண்ட வகையில் சிலர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர். ஆனால், அவர் இவ்வாறு எங்கேயும் பேசவில்லை. இது அவரது பெயரில், ABP nadu லோகோ பயன்படுத்தி சிலர் வேண்டுமென்றே தயாரித்த போலியான நியூஸ் கார்டு. இதுபற்றி நாம் ABP Nadu டிஜிட்டல் பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே, இந்த செய்தியை நமது வாசகர்கள் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், செந்தில் பாலாஜி பற்றி சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகக் குறிப்பிட்டு, அவரது தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


முடிவு
:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான்’ என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False