FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை – யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

இதே நபர், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு 4000 பேருக்கும் மேல் ஷேர் செய்யப்பட்டுள்ளதால், அனைவருக்கும் நன்றி என்று கூறி மீண்டும் இதே தகவலை ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிர்ந்ததையும் கண்டோம்.

Facebook Claim Link 1Archived Link 1

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்திருப்பதே ஒரு போலியான செய்தி. அதுவும் 4000 பேர் வரை ஷேர் செய்யப்பட்டிருப்பதால், மகிழ்ச்சி என்று வேறு குறிப்பிட்டு, இன்னொரு பதிவும் வெளியிடுகிறார். இது தெரிந்தே செய்த மோசடியாகும்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ மையமாக வைத்து, பாஜக கூட்டணியை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அவரது வருகையை மையப்படுத்தி, பலவிதமான வதந்திகள் சமூக வதந்திகள் பரவி வருகின்றன. அவை பற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம். 

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

அந்த வரிசையில் பகிரப்பட்ட மற்றொரு போலிச் செய்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளதும். ஆம், இது உண்மையில்லை. இதுபற்றி நாம், தந்தி டிவி ஆசிரியர் குழுவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இது மட்டுமின்றி, பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமாரிடம் விளக்கம் கேட்டோம். அவரும், இது போலியான செய்தி, என்று தெரிவித்தார்.

எனவே, இது போலிச் செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

  1. வெற்றிநடை போடும் தமிழகமே…
    இதையும் கொஞ்சம் ஆராய்ந்து பாத்து சொல்லுங்களேன்

Comments are closed.