வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும்.

வைகோ நாயுடு கடும் எச்சரிக்கை… 😊

அறந்தாங்கியில் மட்டும்தானா,  வேறு எங்கும் இவனின் சிலை உடைக்க வில்லையா என மக்கள் கேள்வி..? 👇,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் தந்தி டிவி லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த செய்தி தற்போது வெளியானது இல்லை என்றும், கடந்த 2019ம் ஆண்டு வெளியான செய்தி என்றும் தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள பெரியார் முழு உருவச்சிலையின் தலையை மர்ம நபர்கள், உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி திராவிடர் கழகம் மற்றும் திமுக தொண்டர்கள் கண்டன போராட்டம் நடத்தி, போலீசாரிடமும் புகார் செய்தனர். 

இதுதொடர்பாக, தந்தி டிவி மற்றும் பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 

Thanthi TV l Polimer News l News18 Tamil Nadu

இந்த செய்தியை எடுத்து, புதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். 

அதேசமயம், “பெரியார் சிலையை உடைக்க வந்தால் கையை துண்டாக வெட்டுவேன்,’’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது சமீபத்தில்தான். இதற்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பெரியார் சிலை பற்றிய செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

Puthiyathalaimurai TV l ABP Nadu l Zee News l Polimer News

இதன்மூலமாக, இரண்டும் வெவ்வேறு செய்தி, என்பது நமக்கு தெளிவாகிறது. மேலும், வைகோ பேச்சிற்கு பதில் கூறும் வகையில் அறந்தாங்கியில் பெரியார் உருவச்சிலையின் தலை உடைக்கப்பட்டதாகக் கூறுவதும் தவறு…

எனவே, கடந்த 2019ம் ஆண்டு வெளியான செய்தியை எடுத்து, புதியது போன்று வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வைகோ எச்சரிக்கையை மீறி அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Misleading

Leave a Reply