
‘’நடிகர் அஜித் ரூ.2.50 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், தமிழ் முன்னணி ஊடகங்கள் பலவும் வெளியிட்ட செய்திகளை இணைத்து, அதன் மேலே, கொரோனா நிவாரண நிதிக்காக, தமிழக அரசிடம் ரூ.2.50 கோடி வழங்கிய நடிகர் அஜித் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் அஜித் வழங்கியது ரூ.25 லட்சம் மட்டுமே. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிழையாக, ரூ.2.50 கோடி என்று குறிப்பிடப்படவே, அதனை உண்மை என்று நம்பி பல்வேறு ஊடகங்களும் ரூ.2.50 கோடி வழங்கியதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளன. இதனை சாமானிய வாசகர்களும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Ajith Manager Suresh Chandra Tweet Link I Archived Link
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தவே, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மீண்டும் விளக்கம் அளித்து, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், அவர் தமிழக அரசின் திருத்தப்பட்ட செய்தியறிக்கையையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.
அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதுதவிர, திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், நடிகர் அஜித் ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, தவறுதலாக வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையை சரிபார்க்காமல், உடனடியாக, ஊடகங்கள் பிரேக்கிங் நோக்கத்தில் செய்தி வெளியிட, அதனை மற்றவர்களும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர் என்று சந்தேகம் இன்றி தெளிவாகிறது.
தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட புதிய செய்தி அறிக்கையை கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கியதாக பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
